Thursday, March 15, 2007

நம்பிக்கை

எழுப்பிய தாயின் மேல் எரிந்து விழுந்துவிட்டு
போர்வைக்குள் புதைந்துகொண்டு
கலைந்த கனவை தொடர எண்ணுதல் போல்
இன்னமும் நம்புகிறேன்
நீ மீண்டும் வருவாயென.

12 comments:

said...

வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க முத்துலெட்சுமி.

said...

ம்ம்ம்… கனவு தொடர வாழ்த்துக்கள்!!! ;-)

said...

ஒரு பதில் கவிதை...

ஒவ்வொரு முறையும் உன் நிதர்சனத்தின் முன் தோற்றுப்போய்
திரும்பும்போதும்,
மீண்டும் மீண்டும் உன்னிடமே வந்து
நிற்கிறேன் பழைய முகத்தின்மேல் புதிய முகப்பூச்சுடன் வரும் வயதான நடிகன்போல,
என் தேடல்கள் ஒவ்வொருமுறையும் உன்னுடனே முடிவடைவதில் மகிழ்ச்சியே!

said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அருட்பெருங்கோ அவர்களே.

said...

தேவ உதிப்தா, முகப்பூச்சுகளின் அடர்த்தியால்தான் தோல்வியே தொடர்கிறதோ என்னவோ. எல்லாவற்றையும் அழித்து விட்டு உண்மை முகத்துடன் ஒரு முறை முயன்று பாருங்களேன். தவிரவும் மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் முடியுமெனில் தேடல்களின் பயன் தான் என்ன? உங்களின் தேடலின் அளவுகோல்களை மறுபரிசீலனை செய்து பாருங்களேன்.

said...

என் கவிதையை கேவலப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

Anonymous said...

லஷ்மி உங்களுடைய இரண்டு கவிதைகளையும் மிகவும் ரசித்து படித்தேன். பழைய கவிதைகள் என்று முந்தைய பதிவில் பார்த்தேன். அழகாய் இருக்கின்றன உங்கள் நேர்மை மிளிரும் கவித்துவம். இப்பவும் எழுதுங்க ப்ளீஸ். கவிதை படிக்கிற அளவு நான் இலக்கியவாதி இல்ல. ஆனா எனக்கு நிஜமாவே படிச்ச உடனே உங்க கவிதைகள் இரண்டும் பிடிச்சிருந்தது. மேலும் பல எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

said...

நன்றி மதுரா. இப்போதும் நான் எழுதுவது உண்டுதான். ஆனால் இடைவெளிதான் கொஞ்சம் அதிகம்.இதுவரை கடந்த 10 வருடங்களில் மொத்தமாய் ஒரு 15 எழுதியிருப்பேன். எனது நண்பர் வட்டத்தில் ஏதோ எப்பவாவதுதானே இந்த அசம்பாவிதம் நடக்குதுன்னுதான் பொறுத்து போறாங்கன்னு நினைக்கறேன். :-) அப்பொப்பொ இப்படி பாராட்டுக்களை கேட்கறப்போ அடடா, நம்மையும் பொறுத்து படிக்க இன்னொரு ஆள் கிடைச்சாச்சுன்னு சந்தோஷமா இருக்குங்க.

தேவ உதிப்தா, எதற்காக இந்த கோபம் என்று எனக்கு புரியவில்லை. உண்மையிலேயே என் பதில் எந்த விதத்திலாவது உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். இனி உங்களுக்கு நன்றி தவிர வேறெதுவும் நிச்சயம் சொல்லப்போவதில்லை. மேலும் அந்த பதிலையும் வேண்டுமானாலும் சொல்லுங்கள், நீக்கி விடுகிறேன்.

said...

மிகவும் பிடித்திருக்கிறது, கொஞ்சம் உண்மையாய், நேர்மையாய் அழகாய் இருக்கிறது.

said...

நன்றி பத்மா.

said...

நல்ல கவிதை :)

said...

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கோபாலன்.