Monday, March 19, 2007

நம்பிக்கை - 2

தொண்டையை வறளச்செய்யும் இந்த தாகம் பயமுறுத்தினாலும்
தூரத்தில் தெரியும் நீர்பரப்பு
கண்ணில் தூவிய நம்பிக்கை காரணமாய்
உயிர் தரித்திருக்கிறேன் இன்னமும்.
தயவு செய்து அது கானல் நீராயிருப்பினும்
என்னிடம் யாரும் சொல்லிவிடாதீர்கள்.
இன்னும் சற்று நேரமேனும் நான் உயிர் வாழ விரும்புகிறேன்.

9 comments:

said...

//தயவு செய்து அது கானல் நீராயிருப்பினும்
என்னிடம் யாரும் சொல்லிவிடாதீர்கள்.//

இப்படியான கற்பித்துக்கொண்ட நம்பிக்கையில்தான் வாழ்வு நகர்கிறது இல்லையா...? நல்லாயிருந்தது. எளிதாக உங்கள் உணர்வுகளை கடத்துகின்றன வார்த்தைகள்.

said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆழியூரான்.

நீங்கள் தஞ்சை சரபோஜிக்கல்லூரியில் படித்ததாக உங்கள் பதிவில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். சொந்த ஊரும் தஞ்சை பக்கமா?

said...

:)

நல்லாயிருக்கு

said...

சென்ஷி, முதலில் வருகைக்கு நன்றி.

ஆமா, நல்லாயிருக்குன்னு சொல்லிட்டு, ஸ்மைலி போட்டிருக்கீங்களே, என்ன அர்த்தம்னு புரியலையே???? எதுனா உள்குத்தா? நமக்கு கொஞ்சம் சூசனை கம்மிங்க. அப்படியெதுனா இருந்தா நீங்களே விளக்கிடுங்கண்ணா.

said...

எளிமையா அழகா இருக்குங்க

said...

வந்ததுக்கும் பாராட்டினதுக்கும் ரொம்ப நன்றி அய்யனார்.

said...

அலங்காரமில்லாத வார்த்தைகளில் ஆர்ப்பாட்டமில்லாத மனதின் எளிமையான ஆசைகளின் வெளிப்பாடு.நன்றாக இருக்கிறது.

said...

ரொம்ப நன்றிங்க கண்மணி.

said...

நல்ல வரிகள்.

நல்ல முயற்சியும் கூட.

வாழ்த்துக்கள்.