எழுப்பிய தாயின் மேல் எரிந்து விழுந்துவிட்டு
போர்வைக்குள் புதைந்துகொண்டு
கலைந்த கனவை தொடர எண்ணுதல் போல்
இன்னமும் நம்புகிறேன்
நீ மீண்டும் வருவாயென.
Thursday, March 15, 2007
Monday, March 12, 2007
கையெட்டும் தூரம்
உதிரத்தொடங்கிவிட்ட சுவற்றுச்சுண்ணாம்பு
காட்டுகின்ற தெளிவற்ற ஓவியமாய்
மாறியபடியிருக்கின்றன என் முடிவுகள்.
பெரியதொரு பந்தில் விழுந்த ஊசித்துளை வழி
ஒரு சீராய் குறைகின்ற காற்றுப்போல்
இறங்கியே வருகிறது என் மனவுறுதி.
உன் பார்வை எறும்புகள் ஊர்ந்ததில்
நம்மிடையிலான பாறைத்தடைகள் தகர்கின்றன.
நம்மிருவருக்கும் இப்போது
அப்படியொன்றும் இடைவெளி அதிகமில்லை.
காட்டுகின்ற தெளிவற்ற ஓவியமாய்
மாறியபடியிருக்கின்றன என் முடிவுகள்.
பெரியதொரு பந்தில் விழுந்த ஊசித்துளை வழி
ஒரு சீராய் குறைகின்ற காற்றுப்போல்
இறங்கியே வருகிறது என் மனவுறுதி.
உன் பார்வை எறும்புகள் ஊர்ந்ததில்
நம்மிடையிலான பாறைத்தடைகள் தகர்கின்றன.
நம்மிருவருக்கும் இப்போது
அப்படியொன்றும் இடைவெளி அதிகமில்லை.
பழைய நினைப்பு...
சென்ற வாரயிறுதியில் ஊருக்குச்சென்று திரும்பும்போது எனது பழைய கவிதைகள் சில என்னிடம் கிடைத்தன. என் தோழி ஒருவர் அவ்வப்போது நான் கிறுக்கிய கவிதைகள் சிலவற்றை பதிந்து வைத்திருந்தார். அவரிடம் வலைப்பதிவைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தபோது இவற்றையும் அதில் சேர்க்கலாமே என்று சொல்லி எடுத்து தந்தார். இதில் பெரும்பாலானவை நான் இளநிலை கணிப்பொறியியல் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் எழுதியவை. இப்போது படித்து பார்க்கையில் சற்றே சிறுபிள்ளைத்தனமாய் தோன்றினாலும், படிக்கையில் அவை நினைவு படுத்தும் அந்த கல்லூரி வாழ்க்கையும் இதில் பெரும்பாலான கவிதைகளை நான் எழுதக்காரணமாயிருந்த என்னுடைய அப்போதைய ஒருதலைக்காதலும் என் வாழ்வின் மறக்கவியலாத இனிய கணங்கள். அவற்றை இங்கே வலையேற்றி எப்போதாவது இந்தப்பக்கம் வந்து போகும் சிலரையும் பயமுறுத்துவதாக முடிவு செய்துள்ளேன். மேற்கொண்டு தொடர்வது தங்களது தாங்கும் சக்தியைப்பொறுத்தது. அவ்வப்போது நான் என் குறிப்பேடுகளின் ஓரத்தில் எனக்கே பெரும்பாலான நேரத்தில் புரியாது போய்விடுகிற என் அற்புத கையெழுத்தில் கிறுக்கியிருந்ததை பொறுமையாய் படியெடுத்து சேமித்து வைத்திருந்த என் அன்புத்தோழிக்கு என் நன்றி.
Tuesday, March 06, 2007
கதாநாயகிகளென்னும் ஆறாவது விரல்
பெரும்பாலான தமிழ் படங்களுக்கு கதாநாயகி எனும் பாத்திரமே ஆறாவது விரல் போன்று ஒரு தேவையற்ற உறுப்பேயாகும். எனது இந்த நம்பிக்கையை நான் முந்தாநாள் பார்த்த லீ படமும் உறுதி செய்தது. படம் உண்மையிலேயே நல்ல வித்தியாசமான கதையமைப்போடிருந்தது. வழக்கமான மசாலாத்தனங்களும் உண்டென்றாலும் கூட புது விதமான கதையமைப்பு படத்தை தூக்கி நிறுத்தியது. படத்தின் முக்கிய குறைபாடுகள் இரண்டு - பொருத்தமற்ற இசை மற்றும் தேவையற்ற வசனங்கள். இப்போது இவற்றை விடுங்கள். நான் படத்தை முழுமையாக விமர்சிப்பதாயில்லை. படத்தில் கதாநாயகியாக கருதப்பட வேண்டியவர் நிலா. சற்றே அரை லூசுத்தனமான இவரது கதாபத்திரம் படத்திற்கு எந்த விதத்திலும் தேவையானதல்ல. கவர்ச்சிக்காக என்று சொன்னாலும் கூட அதற்கெனவே தனியாக 2 குத்துப்பாட்டுக்களும் குமட்ட வைக்கும் நடன அசைவுகளும் படத்திலிருக்கின்றன. அதுவே போதுமே? நகைச்சுவைக்காகவென்றால் ஒரு நகைச்சுவை நடிகை போதுமே. எதற்காக கதாநாயகி என்று ஒருவர்?
படத்தின் மையக்கதை இதுதான் - ஒரு லட்சியத்துடிப்புள்ள கால்பந்தாட்ட பயிற்சியாளர் பிரகாஷ்ராஜ். இவர் சமூகத்தில் கீழ்த்தட்டிலிருந்து ஆர்வமும் திறமையுமுள்ள இளைஞர்களைத்தேர்ந்தெடுத்து தயாரித்து வருகிறார். அவர்களில் முதன்மையானவன் கதாநாயகனான லீ என்கிற லீலாதரன்(ஈ என்கிற ஈஸ்வரனின் வெற்றியைத்தொடர்ந்து இப்போது லீ. ஹ்ம்ம்.. தமிழ் சினிமாவை ஆண்டவன் தான் காப்பாத்தணும் போல). மொத்தக்குழுவும் தத்தமது குடும்பத்தின் பொருளாதார தேவைகளுக்காகவும் லட்சியதாகத்தாலும் கால்பந்தில் சர்வதேச அளவில் சாதிப்பதை குறிக்கோளாக கொண்டவர்கள். ஆனால் இந்த குழுவின் கனவு அதிகார வர்க்கத்தின் சுயநலத்தாலும் வர்க்க மற்றும் சாதித்திமிரினாலும் சிதைக்கப்படுகிறது. அத்தோடு நண்பர்கள் சிலரையும் தங்கள் வழிகாட்டியாக இருந்த பயிற்சியாளர் பிரகாஷ்ராஜையும் இழக்கிறார்கள். மிச்சமிருக்கும் நண்பர்கள் பழிவாங்க சபதமேற்கிறார்கள். இரவுபகலாக உழைத்து(வழக்கம் போல காலையில் பால் பாக்கெட் போடுவது, பேப்பர் போடுவது, மூட்டைதூக்குவது என்று எல்லாமும் செய்து ஒரு சில நாட்களில் லட்சக்கணக்கில் சேர்த்துவிடுகிறார்கள்) துப்பாக்கி ஒன்றை வாங்கி தெளிவான திட்டமிடலுடன் வில்லனை கொலை செய்ய நெருங்குகையில் புல்லட் புரூஃப் கண்ணாடி உபயத்தில் அவன் தப்புகிறான். தொடர்ந்த முயற்சிகளில் அவன் தப்பிப்பதோடல்லாமல் இந்த நண்பர் குழுவினை கூலிப்படையென அடையாளப்படுத்துகிறான். எனவே அவனை கொல்வதை விட முக்கியமாக செய்யவேண்டியது அவனை சமூகத்திற்கு அடையாளம் காட்டுவதுதான் என்று உணர்ந்து சன் டி.வி மூலமாக தங்கள் தரப்பு நியாயத்தை மக்கள் முன் வைக்கிறார்கள். பிறகு வழக்கம் போல் மக்கள் விழிப்புணர்வு பெருகி, அந்த வில்லன் அமைச்சர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட மீண்டும் ஒரு மூர்க்கமான தாக்குதல் தொடுக்கிறான். மேலும் ஒரு நண்பனை பலிகொடுக்கும் லீ வீறுக்ண்டெழுந்து வில்லனை ஓட ஓட விரட்டி ஒரு சரியாக ஒரு காலந்தாட்ட மைதானத்திற்கே கொண்டு சென்று அடித்து துவம்சம் செய்கிறான்.
சரி, இந்த கதையில் நிலா எங்கு வருகிறார் என்கிறீர்களா? ஆரம்பத்தில் ஒரு சில நகைச்சுவை காட்சிகளில் தோன்றுகிறார். உண்மையிலேயே நிலாவும் அந்த சைதை பட்டாபியும் வரும் நகைச்சுவைக்காட்சிகள் அருமை. பிறகு நாயகனுடன் நட்பாகிறார். அவரே அதை காதல் என்று நினைத்துக்கொண்டு பார்த்த 4வது நிமிடம் நாயகனுடன் ஒரு கனவுப்பாடலுக்கு ஆடிவிட்டு காணாமல் போய்விடுகிறார். பிறகு நாயகன் வில்லனை கொல்லும் தன் முயற்சியில் தோல்வியடைந்து ஒரு மறைவிடத்தில் பதுங்குகிறான். அதுவரை அரைலூசுத்தனமாய் திரிந்த நாயகியோ போலீசாலும் கண்டுபிடிக்க முடியாத அந்த இடத்தை தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்து அங்கே பிரசன்னமாகி நாயகனை கண்டு கோபித்து குமுறி பின் அவனது முன்கதைச்சுருக்கம் கேட்டு நெகிழ்ந்து திருந்தச்சொல்லி கெஞ்சி பின் காணாமல் போகிறார். மையக்கதையில் நாயகியின் பங்களிப்புத்தான் என்ன? ஒன்றுமேயில்லை. பின் எதற்காக இந்த அழகுப்பதுமைகள் வந்து போகிறார்கள்? எனக்கு தெரிந்தவரை 10க்கு 8 படங்களில் நாயகிகளின் நிலை இதுதான். இது தவிர ஒரு அம்மா நடிகை, கற்பழிக்கப்பட்டு இறந்து போகக்கூடிய ஒரு தங்கை மற்றும் நகைச்சுவை நடிகருக்கான ஜோடி(தனிப்பட்ட நகைச்சுவை நடிகையல்ல) இவ்வளவுதான் சராசரி தமிழ் சினிமாவில் அதிக பட்ச சாத்தியமான நடிகைகள் பட்டியல். பானுமதி, சாவித்திரி தொடங்கி சரிதா, சுகாசினி , ரேவதி என்று ஒரளவுக்கேனும் முக்கிய கதாபத்திரங்களில் தொடர்ந்து நடித்த நடிகைகள் வெகு சொற்பம். தமிழ் சினிமாவிற்கு தேவைதானா இந்த ஆறாவது விரல்?
படத்தின் மையக்கதை இதுதான் - ஒரு லட்சியத்துடிப்புள்ள கால்பந்தாட்ட பயிற்சியாளர் பிரகாஷ்ராஜ். இவர் சமூகத்தில் கீழ்த்தட்டிலிருந்து ஆர்வமும் திறமையுமுள்ள இளைஞர்களைத்தேர்ந்தெடுத்து தயாரித்து வருகிறார். அவர்களில் முதன்மையானவன் கதாநாயகனான லீ என்கிற லீலாதரன்(ஈ என்கிற ஈஸ்வரனின் வெற்றியைத்தொடர்ந்து இப்போது லீ. ஹ்ம்ம்.. தமிழ் சினிமாவை ஆண்டவன் தான் காப்பாத்தணும் போல). மொத்தக்குழுவும் தத்தமது குடும்பத்தின் பொருளாதார தேவைகளுக்காகவும் லட்சியதாகத்தாலும் கால்பந்தில் சர்வதேச அளவில் சாதிப்பதை குறிக்கோளாக கொண்டவர்கள். ஆனால் இந்த குழுவின் கனவு அதிகார வர்க்கத்தின் சுயநலத்தாலும் வர்க்க மற்றும் சாதித்திமிரினாலும் சிதைக்கப்படுகிறது. அத்தோடு நண்பர்கள் சிலரையும் தங்கள் வழிகாட்டியாக இருந்த பயிற்சியாளர் பிரகாஷ்ராஜையும் இழக்கிறார்கள். மிச்சமிருக்கும் நண்பர்கள் பழிவாங்க சபதமேற்கிறார்கள். இரவுபகலாக உழைத்து(வழக்கம் போல காலையில் பால் பாக்கெட் போடுவது, பேப்பர் போடுவது, மூட்டைதூக்குவது என்று எல்லாமும் செய்து ஒரு சில நாட்களில் லட்சக்கணக்கில் சேர்த்துவிடுகிறார்கள்) துப்பாக்கி ஒன்றை வாங்கி தெளிவான திட்டமிடலுடன் வில்லனை கொலை செய்ய நெருங்குகையில் புல்லட் புரூஃப் கண்ணாடி உபயத்தில் அவன் தப்புகிறான். தொடர்ந்த முயற்சிகளில் அவன் தப்பிப்பதோடல்லாமல் இந்த நண்பர் குழுவினை கூலிப்படையென அடையாளப்படுத்துகிறான். எனவே அவனை கொல்வதை விட முக்கியமாக செய்யவேண்டியது அவனை சமூகத்திற்கு அடையாளம் காட்டுவதுதான் என்று உணர்ந்து சன் டி.வி மூலமாக தங்கள் தரப்பு நியாயத்தை மக்கள் முன் வைக்கிறார்கள். பிறகு வழக்கம் போல் மக்கள் விழிப்புணர்வு பெருகி, அந்த வில்லன் அமைச்சர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட மீண்டும் ஒரு மூர்க்கமான தாக்குதல் தொடுக்கிறான். மேலும் ஒரு நண்பனை பலிகொடுக்கும் லீ வீறுக்ண்டெழுந்து வில்லனை ஓட ஓட விரட்டி ஒரு சரியாக ஒரு காலந்தாட்ட மைதானத்திற்கே கொண்டு சென்று அடித்து துவம்சம் செய்கிறான்.
சரி, இந்த கதையில் நிலா எங்கு வருகிறார் என்கிறீர்களா? ஆரம்பத்தில் ஒரு சில நகைச்சுவை காட்சிகளில் தோன்றுகிறார். உண்மையிலேயே நிலாவும் அந்த சைதை பட்டாபியும் வரும் நகைச்சுவைக்காட்சிகள் அருமை. பிறகு நாயகனுடன் நட்பாகிறார். அவரே அதை காதல் என்று நினைத்துக்கொண்டு பார்த்த 4வது நிமிடம் நாயகனுடன் ஒரு கனவுப்பாடலுக்கு ஆடிவிட்டு காணாமல் போய்விடுகிறார். பிறகு நாயகன் வில்லனை கொல்லும் தன் முயற்சியில் தோல்வியடைந்து ஒரு மறைவிடத்தில் பதுங்குகிறான். அதுவரை அரைலூசுத்தனமாய் திரிந்த நாயகியோ போலீசாலும் கண்டுபிடிக்க முடியாத அந்த இடத்தை தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்து அங்கே பிரசன்னமாகி நாயகனை கண்டு கோபித்து குமுறி பின் அவனது முன்கதைச்சுருக்கம் கேட்டு நெகிழ்ந்து திருந்தச்சொல்லி கெஞ்சி பின் காணாமல் போகிறார். மையக்கதையில் நாயகியின் பங்களிப்புத்தான் என்ன? ஒன்றுமேயில்லை. பின் எதற்காக இந்த அழகுப்பதுமைகள் வந்து போகிறார்கள்? எனக்கு தெரிந்தவரை 10க்கு 8 படங்களில் நாயகிகளின் நிலை இதுதான். இது தவிர ஒரு அம்மா நடிகை, கற்பழிக்கப்பட்டு இறந்து போகக்கூடிய ஒரு தங்கை மற்றும் நகைச்சுவை நடிகருக்கான ஜோடி(தனிப்பட்ட நகைச்சுவை நடிகையல்ல) இவ்வளவுதான் சராசரி தமிழ் சினிமாவில் அதிக பட்ச சாத்தியமான நடிகைகள் பட்டியல். பானுமதி, சாவித்திரி தொடங்கி சரிதா, சுகாசினி , ரேவதி என்று ஒரளவுக்கேனும் முக்கிய கதாபத்திரங்களில் தொடர்ந்து நடித்த நடிகைகள் வெகு சொற்பம். தமிழ் சினிமாவிற்கு தேவைதானா இந்த ஆறாவது விரல்?
Subscribe to:
Posts (Atom)